Kishore Kumar Hits

Dhruv Vikram - Yaarumillaa - Tamil şarkı sözleri

Sanatçı: Dhruv Vikram

albüm: Adithya Varma


யாருமில்லா வாழ்க்கையில்
நீ இருக்க ஏங்கினேன்
காலம் வரை காதலாய்
உன் மடியில் தூங்கினேன்
நீ பிரிந்து போகிறாய்
என் உயிரில் உடைகிறேன்
எஞ்சி விட்ட தூசிலே
நான் என்னை கோர்க்கிறேன்
அவள் பார்வைகள் சுமக்காமலே
அந்த நாளையும் வருதே
நொடி நேரத்தில் உயர்வானது
அந்த சாவெனும் வரமே
நீ தொலைத்த ஆழத்தில் நான் ஒழிகிறேன்
அனாதை காட்டிலே நான் கரைகிறேன்
கண்ணீரை காப்பாற்றி உனக்காக சேர்க்கிறேன்
தடாகமே

தாகம் இல்லாத மீனும் தண்ணீரில்
வாழும் நியாத்தை ஏற்கிறேன்
யாரும் செல்லாத தீவின் மையத்தில்
புள்ளி பூவாக போகிறேன்
ஈசல் இறக்கைமேல் ஈயின் பாதங்கள்
பாரம் எப்படி தாங்குவேன்
நீயே இல்லாத கீறல் கொள்ளாத
நெஞ்சை எங்கே நான் வாங்குவேன்
கண்ணீரை காப்பாற்றி
உனக்காக சேர்க்கிறேன் தடாகமே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar