Kishore Kumar Hits

S.S.Kumaran - Oru Maalai Pozhuthil şarkı sözleri

Sanatçı: S.S.Kumaran

albüm: Theneer Viduthi (Original Motion Picture Soundtrack)


ஒரு மாலைப் பொழுதில்
நான் உனைப் பார்த்தேன்
உனைப் பார்த்தே அன்பே
நான் எனைப் பார்த்தேன்
உறங்காமல் உனைக் காண்கிறேன் ஓ
உனக்காக உயிர் வாழ்கிறேன் ஓ
ஒரு மாலைப் பொழுதில்
நான் உனைப் பார்த்தேன்
உனைப் பார்த்தே அன்பே
நான் எனைப் பார்த்தேன்

அதிகாலை நினைவுகள் அழைக்கும்
அணையாமல் நெருப்பெனக் கொதிக்கும்
உன் காதல் ஞாபக மழை வந்து அணைக்கும்
அடங்காத ஆசைகள் இருக்கும்
ஆனாலும் மௌனங்கள் தடுக்கும்
என் காதல் நதியில் இலையென தவிக்கும்
இதுதான் உயிர் காதலா
இரு உயிரில் வரும் மோதலா
நெஞ்சே நான் உள்ள வரையில்
உனை சுமப்பேன் இதயத்தின் அறையில்
ஒரு மாலைப் பொழுதில்
நான் உனைப் பார்த்தேன்

என்னை தேடி தேர் வந்த வேளை
வழி மாறிப் போனது பாதை
புரியாமல் கண்ணனை பிரிந்தாள் ராதை
இடி மோதி இதயத்தில் வார்த்தை
இதுதாமோ காதலின் கீதை
வருவேன் உன் கோகுல தோட்டத்தில் நாளை
மெதுவாய் என்னை வறுட வா
தொட்டு முழுதாய் என்னை திருட வா
நீ தான் என் உயிர் நீ தான்
இனி நீ தான் என் உயிர் நீ தான்
ஒரு மாலைப் பொழுதில்
நான் உனைப் பார்த்தேன்
உனைப் பார்த்தே அன்பே
நான் எனைப் பார்த்தேன்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar