Kishore Kumar Hits

Siddharth Vipin - Uyire Uyire şarkı sözleri

Sanatçı: Siddharth Vipin

albüm: JK Enum Nanbhanin Vaazhkkai (Original Motion Picture Soundtrack)


உயிரே உயிரே நீ வந்ததேனென்று தெரியாதே
உயிரே உயிரே நீ போவதெங்கென்று புரியாதே
எதுவும் எதுவும் நம் கையில் நிச்சயம் கிடையாதே
இதனை மனிதன் தன் அறிவில் வெல்லவும் இயலாதே
நாளை என்ன ஆகும் என்று
யாரும் சொல்ல முடியாதே
நாகரீக வாழ்வில் உள்ள
மோகம் மட்டும் குறையாதே
காணுகின்ற காட்சி எல்லாம்
உண்மை என்று ஆகாதே
காண போகும் மாற்றம் என்ன
யூகம் செய்ய கூடாதே ஹே
காட்சி மாறி போனாலும்
நம் கண்ணை விட்டு விலகாதே
பார்வை இன்றி போனாலும்
வரும் கனவை கொல்ல முடியாதே
காலை வேளையில் தோன்றும் சூரியன்
மாலை ஆனதும் சாய்ந்து தூங்குதே
மாலை வேளையில் தோன்றும் சந்திரன்
காலை வந்ததும் தேய்ந்து வீங்குதே
காணும் யாவுமே அவ்வாறே
மாறுகின்றதே மண் மேலே
மாறிடாமலே போனாலே நாம் ஏது
காதல் கொள்வது தீங்கானால்
நாமும் வந்தது எவ்வாறு
தேவை அனைத்தை தேடாமல் வாழ்வேது
காட்சி மாறி போனாலும்
நம் கண்ணை விட்டு விலகாதே
பார்வை இன்றி போனாலும்
வரும் கனவை கொல்ல முடியாதே
எல்லை கோடுகள் நூறு உள்ளன
எந்த கோட்டிலே நாமும் நிற்பதோ
பள்ளம் மேடுகள் பாதை ஆயின
எந்த பாதையில் நாமும் செல்வதோ
யாரும் அற்ற ஊர் தீவை போல்
நாமும் வாழ்வுதான் நன்றாகும்
ஒன்று கூடிய ஊர்தானே பூலோகம்
யாரும் யாரையும் சாராமல்
வாழ்வை வெல்லுதல் ஆகாதே
தனித்து வாழ்வதில்
உன் ஜென்மம் தீராதே
காட்சி மாறி போனாலும்
நம் கண்ணை விட்டு விலகாதே
பார்வை இன்றி போனாலும்
வரும் கனவை கொல்ல முடியாதே
உயிரே உயிரே நீ வந்ததேனென்று தெரியாதே
உயிரே உயிரே நீ போவதெங்கென்று புரியாதே
எதுவும் எதுவும் நம் கையில் நிச்சயம் கிடையாதே
இதனை மனிதன் தன் அறிவில் வெல்லவும் இயலாதே
நாளை என்ன ஆகும் என்று
யாரும் சொல்ல முடியாதே
நாகரீக வாழ்வில் உள்ள
மோகம் மட்டும் குறையாதே
காணுகின்ற காட்சி எல்லாம்
உண்மை என்று ஆகாதே
காண போகும் மாற்றம் என்ன
யூகம் செய்ய கூடாதே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar