Kishore Kumar Hits

Vaali - Nenichapadi (From "Kadhalar Dhinam") şarkı sözleri

Sanatçı: Vaali

albüm: Super Hits of Vaali


நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
நெனச்சபடி நெனச்சபடி
மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாலோ
உயிருடன் கலந்தாலோ
உனக்கெனப் பிறந்தாலோ
உயிருடன் கலந்தாலோ
என் தோள்களே தோட்டம் என்று
என்னாளுமே தொத்திக்கொள்ளும்
காற்றல்லவா நீ என் கண்ணே
கல்யாண நாளில் மாலை கொள்ள
கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
அந்த வனம் நந்தவனம் ஆகும்
மருதாணிக் கோலம் போட்டு
மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
மருதாணிக் கோலம் போட்டு
மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
உன் கணவன் நாளை தான் வரவேண்டும்
உயிர் காதல் நெஞ்சையே தரவேண்டும்
மணப்பந்தல் தோரணம் நான் போட
மனவாலனோடு உன் கைகூட
உன் தந்தை உள்ளந்தான் ஊஞ்சல் ஆட

காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை

காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை
வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக
வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்
உன்னை எண்ணி வாழ்வதே என்னின்பம்
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்
உன்னை எண்ணி வாழ்வதே என்னின்பம்
இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே
எந்தன் காதல் வாழும்
நீ வாழ்க நலமாக
நீ வாழ்க நலமாக
நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
நெனச்சபடி நெனச்சபடி
மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாலோ
உயிருடன் கலந்தாலோ
உனக்கெனப் பிறந்தாலோ
உயிருடன் கலந்தாலோ

அல்லி விழியோரம்
அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது
தாழை மலர் சூட்டி
அல்லி விழியோரம்
அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது
தாழை மலர் சூட்டி
ஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி
அன்னமிவள் மேடை வந்தால் மின்னல் முகம் காட்டி
கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணைத்
தொட்டுத் தாலி கட்டினான் மாப்பிள்ளை
கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணைத்
தொட்டுத் தாலி கட்டினான் மாப்பிள்ளை
இந்த ஏழை நெஞ்சமும்
நீ வாழ என்றும் பூக்கள் தூவும்
நீ வாழ்க நலமாக

நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
நெனச்சபடி நெனச்சபடி
மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாலோ
உயிருடன் கலந்தாலோ
உனக்கெனப் பிறந்தாலோ
உயிருடன் கலந்தாலோ
மருதாணிக் கோலம் போட்டு
மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
மருதாணிக் கோலம் போட்டு
மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar